News October 18, 2025

கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 19, 2025

கடலூர் மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல்!

image

கடலூர் மத்திய சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 கைபேசிகள், சிம் கார்டுகள் மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் கண்டெடுத்தனர். இதுகுறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், முதுதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News October 19, 2025

கடலூர்: வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்

image

கடலூர் மாவட்டம், மேல்பூவாணிகுப்பம் சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு பெற வரும் நவ.5-ம் தேதிக்குள் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவபுரத்தில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளில் SC/ST- 40%, BC-க்கு 25% , MBC-க்கு 25 % மற்றும் இதர வகுப்பினருக்கு 10 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News October 19, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!