News October 18, 2025
திருச்சுழி: காரில் கடத்திச் சென்ற 2 பேருக்கு குண்டாஸ்

குருந்தங்குளத்தில் கடந்த மாதம் தந்தை, மகனை காரில் கடத்தி ரூ.25,000 பணம் பறித்த வழக்கில் செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த லெட்சுமணன், வீரசூரன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லெட்சுமணன், வீரசூரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி கண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Similar News
News December 7, 2025
விருதுநகர்: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
விருதுநகர்: மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய காதல் கணவர்

சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் முத்து விக்னேஸ்வரன் (22). பட்டாசு தொழிலாளியான இவர் 4 மாதத்திற்கு முன் பாக்கியலட்சுமியை காதல் திருமணம் செய்துள்ளார். முத்து விக்னேஸ்வரன் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பாக்கியலட்சுமி பணம் தர மறுத்ததால் அவரை மிரட்டுவதற்காக அவர் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில் முத்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.
News December 7, 2025
விருதுநகர்: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <


