News October 18, 2025
நீலகிரியில் வசமாக சிக்கிய நபர்: போலீஸ் அதிரடி

கூடலூர் அத்திப்பாளி பகுதியை சேர்ந்தவர் அனிபா. நள்ளிரவில் வீட்டுக்குள் சத்தம் கேட்டு அனிபா எழுந்தார். பின்னர் டார்ச் லைட் அடித்து பார்த்த போது, வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் வந்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சசமயம் வாலிபர் தப்பி ஓடினார். இது குறித்து அனிபா கூடலூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருட முயன்ற அதே பகுதியை சேர்ந்த ஷெரீப் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News October 18, 2025
நீலகிரிக்கு ஆரஞ்ச் அலார்ட்: மக்களே உஷார்!

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் ஆலார்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News October 18, 2025
நீலகிரி மக்களே எச்சரிக்கை அறிவிப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான நீலகிரி ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
News October 18, 2025
நீலகிரி: ஓட்டுநர் உரிமம் வேண்டுமா?

நீலகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் <