News October 18, 2025
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்

தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்காக சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2 நாள்களில் 6,920 அரசு பஸ்களில் 3,59,840 பேர் பயணித்துள்ளனர் என்று அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். மேலும், இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News October 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 19, 2025
அப்பாவு பேரவை மரபுகளை மீறுகிறார்: அன்புமணி

புதிய சட்டமன்ற குழு நிர்வாகிகளை ஏற்க சபாநாயகர் அப்பாவு மறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். 24 உறுப்பினர்களை (மொத்த உறுப்பினர்களில் 10%) கொண்ட கட்சிகளை மட்டுமே பேரவையில் அங்கீகரிக்க முடியும் என்று, அரசியலுக்கு ஏற்ப விதிகளை மாற்றுவதாகவும் விமர்சித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சியாக அங்கீகாரம் செய்வதற்கு மட்டுமே 10% உறுப்பினர்கள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News October 19, 2025
பாக்.,ன் கோழைத்தனமான தாக்குதல்: BCCI

ஆப்கனில் பாக்., நடத்திய வான்வழி தாக்குதலில் கபீர், சிப்கதுல்லா & ஹாரூன் ஆகிய 3 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இவர்களது இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள BCCI, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளது. பாக்.,ன் இந்த தாக்குதல் கோழைத்தனமானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. விளையாட்டு வீரர்களின் இழப்பு கவலைக்குரிய ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளது.