News October 18, 2025
தூத்துக்குடி: மக்களே கவனம்.. ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி அருகே உள்ள உப்பாற்று ஓடையில் பெய்து வரும் கனமழை காரணமாக கோரம்பள்ளம் குளத்திற்கு இன்று காலை 5.45 மணி நிலவரப்படி 1000 கன.அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், குளத்தின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. எனவே, கோரம்பள்ளம் குளம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News October 18, 2025
தூத்துக்குடி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 18, 2025
தூத்துக்குடியில் PF குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 என்ற வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மாதந்தோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் சாயர்புரத்தில் உள்ள போப் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 18, 2025
தூத்துக்குடி: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

தூத்துக்குடி மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க.. SHARE பண்ணுங்க.