News October 18, 2025
மயிலாடுதுறை: கொலை வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ்

மயிலாடுதுறையில் இரு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடியமங்கலம் பகுதியில் காதல் முன்விரோதத்தால் வைரமுத்துவை கொன்ற குகன், அன்புநிதி ஆகியோர், மேலும் கொள்ளிடம் பகுதியில் லட்சுமணனை கொன்ற ராகுல், ராஜா (எ) ராமசந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News October 18, 2025
மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

மயிலாடுதுறை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News October 18, 2025
மயிலாடுதுறை: ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய கலெக்டர்

சீர்காழி அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
News October 18, 2025
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா நெல் சிறப்பு பருவ பயிருக்கு காப்பீட்டை நவம்பர் 15-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது www.pmfby.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.