News April 17, 2024
மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமுறைகள் அமலுக்கு வரும். ஏப்ரல் 19ஆம் தேதி மாலை வாக்குப்பதிவு நடந்து முடியும் வரை திரைப்படம், வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ் போன்ற சாதனங்கள் வாயிலாகவோ இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, கேளிக்கை நிகழ்ச்சி மூலமாகவோ யாரும் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது. இந்த விதிமுறையை மீறிபவர்களுக்கு சட்டப்படி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
Similar News
News April 30, 2025
கனடா தேர்தலில் 3 தமிழர்கள் வெற்றி

கனடா நாடாளுமன்ற தேர்தலில் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒக்வில்லே கிழக்கு தொகுதியில், ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சென்னையைச் சேர்ந்த அனிதா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய ஈழத்தமிழர்களும் வெற்றி பெற்றுள்ளனர். லிபரல் கட்சியின் மார்க் கார்னி மீண்டும் பிரதமரானார்.
News April 30, 2025
ALERT: தினமும் இதை சாப்பிடுகிறீர்களா?

கீழ்காணும் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகம் காலியாகிவிடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான உப்பு (பரிந்துரைக்கப்பட்ட அளவு 5 கி) சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள கொழுப்பு, பதப்படுத்திகள் மிகவும் கேடுவிளைவிக்கும். குளிர்பானங்கள் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்துகின்றன. அதீத சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை சிறுநீரகத்திற்கு எமனாக அமையும்.
News April 30, 2025
2 அறை கொடுப்பேன்: VJD காட்டம்

டைம் மிஷின் கிடைத்தால் வரலாற்றில் யாரை சந்திப்பீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களுக்கு 2 அறை கொடுப்பேன் எனவும், ‘சவா’ படம் பார்த்த பிறகு அவுரங்கசீப்பிற்கு 2 அறை கொடுக்க வேண்டும் என தோன்றுவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னிடம் இதுபோன்று அறை வாங்குவதற்கான ஆட்களின் பட்டியல் நிறைய இருப்பதாகவும் கூறினார்.