News October 18, 2025

திருப்பூர் அடுத்து தென்காசி? – படையெடுக்கும் வடமாநிலம்!

image

அமெரிக்க வரியால் திருப்பூர் ஆடை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளன. இதனால், வேலை இழந்த வடமாநில இளைஞர்கள் பலர் சொந்த ஊர் திரும்புகின்றனர். சிலர் தென்காசி மாவட்டத்தில் நாற்று நடவு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தென்காசியில் உள்ள பணியாளர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் உருவாகி உள்ளது.

Similar News

News October 18, 2025

புளியங்குடியில் பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய்

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெரு அருகே பள்ளி சிறுவனை இன்று தெரு நாய் கடித்து உள்ளது. தொடர்ந்து நாளுக்கு நாள் தெரு நாய் கடி சம்பவம் அதிக அளவில் நகராட்சி பகுதியில் நடைபெறுவதால் புளியங்குடி நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக அலுவலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 18, 2025

தென்காசி : HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News October 18, 2025

குற்றாலம் 2வது நாளாக அனைத்து அருவிகளில் குளிக்க தடை

image

தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் நேற்றும் இன்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

error: Content is protected !!