News October 18, 2025

கடலூர்: போதையில் போலீஸ் மீது தாக்குதல்

image

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே குடிபோதையில் இருந்த இரண்டு பேர், ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் சதீஷ்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலர் சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், மாணிக்கம் (57), குபேர் (40) ஆகியோர் மீது நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 19, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News October 18, 2025

கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்ட பௌத்தர்கள் நேரடி மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதற்கான படிவத்தினை <>www.bcmw.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகிற நவ.30க்குள் சென்னை சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!