News October 18, 2025
கடலூர்: போதையில் போலீஸ் மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே குடிபோதையில் இருந்த இரண்டு பேர், ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் சதீஷ்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலர் சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், மாணிக்கம் (57), குபேர் (40) ஆகியோர் மீது நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
கடலூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

கடலூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால்<
News December 7, 2025
கடலூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 7) காலை 8:30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 4 மில்லி மீட்டர், சிதம்பரம் 1.1 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 1 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.5 மில்லி மீட்டர், கடலூர் 0.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 6.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


