News October 18, 2025
நாமக்கல் அருகே சாலை விபத்து: ஒருவர் பலி

தாத்தயங்கர்பட்டி பில்லா துறையை சேர்ந்த வைரமாணிக்கம், 45. இவர் இரவு, நாமக்கல் சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து விட்டு, டூவீலரில் பொட்டிரெட்டிபட்டி அரசு பள்ளி அருகே சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதானால், பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 18, 2025
நாமக்கல்: பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

நாமக்கல் மாவட்டத்தில், 20-10-2025 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடபடுகிறது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டும் நெறிமுறையைப், பின்பற்றி பாதுகாப்பான முறையில் விபத்து மற்றும் மாசற்ற ஒலி குறைந்த பட்டாசுகளை பயன்படுத்துமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 18, 2025
நாமக்கல் கவிஞர் பிறந்தநாள் அரசு தரப்பில் மரியாதை!

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் நினைவு இல்லம் உள்ளது இந்த நினைவு இல்லம் நூலகமாக செயல்பட்டு வருகிறது. அக்டோபர்-19ஆம் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாளையொட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கவிஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். நிகழ்ச்சியில் ஆட்சியர் துர்கா மூர்த்தி பங்கேற்கின்றனர்.
News October 18, 2025
நாமக்கல்: காவலர்களுக்கு வாராந்திர அணிவகுப்பு பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு பயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விமலா, இ.கா.ப., இன்று (18.10.2025) பார்வையிட்டார். அப்போது, காவலர்கள் பணி நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை அவர் வழங்கினார். காவலர்களின் உடல் தகுதி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு நடைபெற்றது.