News April 17, 2024
தமிழகத்தில் 8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள்

தமிழகம் முழுவதும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 511, தென்சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன் கூடுதலாக போலீஸாரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
Similar News
News August 15, 2025
தேச வளர்ச்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்: PM

இல.கணேசனின் மறைவு செய்தி தனக்கு வலியை தந்ததாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க கடுமையாக பணி செய்ததாகவும், தேசத்தின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த தேசியவாதியாக அவர் நினைவுகூரப்படுவார் என்றும் இரங்கல் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் எனவும் இல.கணேசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
News August 15, 2025
இந்தியா வரும் ரொனால்டோ? ரசிகர்களுக்கு HAPPY NEWS!

கால்பந்து GOAT ரொனால்டோ இந்தியாவில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘AFC சாம்பியன்ஸ் லீக் 2’ போட்டியில் ரொனால்டோ விளையாடும் சவுதி கிளப்பான அல்-நாசர், இந்தியாவின் கோவா FC இரண்டும் ஒரே பிரிவில் (Group D) இடம்பெற்றுள்ளன. எப்படியும் இரண்டு அணிகளுக்கு இடையே ஒரு ஆட்டமாவது இந்தியாவில் நடைபெறும். அந்த போட்டிக்கு ரொனால்டோ ஆப்சென்ட் ஆகாமல் இருந்தால், ரசிகர்களுக்கு விருந்து நிச்சயம்!
News August 15, 2025
இல. கணேசன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

நாகாலாந்து கவர்னர் <<17417276>>இல. கணேசன்(80)<<>> மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாஜகவில் மாநிலத் தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த அவருக்கு, 2021-ல் கவர்னர் பதவி வழங்கி மத்திய அரசு சிறப்பித்திருந்தது. அவரது மறைவுக்கு இபிஎஸ், தமிழிசை, அண்ணாமலை, எல்.முருகன், செல்வப்பெருந்தகை, TR பாலு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP