News October 18, 2025
கவர்னருக்கு எதிரான மனு: கோர்ட் சொன்னது என்ன?

<<18013359>>கவர்னருக்கு<<>> எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே கவர்னரின் அதிகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு குறித்து ஜனாதிபதி எழுப்பினார். அந்த வழக்கில் வரும் 21-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும், அதையடுத்து தமிழக அரசின் மனுவை விசாரிக்கலாம் என்றும் கூறி விசாரணையை CJI கவாய் ஒத்திவைத்தார்.
Similar News
News October 18, 2025
லட்சியமா? காதலா? சமந்தா அட்வைஸ்

லட்சியம் (அ) பார்ட்னர், இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது நியாயமற்றது என சமந்தா கூறியுள்ளார். உங்களுடைய லட்சியங்களை நன்றாக புரிந்துகொள்ளும் ஒரு பார்ட்னரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், நாம் அதிகமாக கவலைப்படுவது பார்ட்னர் உள்ளிட்ட உறவுகளை பற்றித்தான் எனவும் கூறியுள்ளார். நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார்.
News October 18, 2025
BREAKING: அறிவித்தார் விஜய்

கரூர் துயரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹20 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், அது கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
News October 18, 2025
Sports Roundup: வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை

*சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. *இஸ்தான்புல்லில் நடந்த சர்வதேச வாள்வீச்சு தொடரில் பவானி தேவி வெள்ளி வென்றார். உலக ஜூனியர் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தான்வி சர்மா முன்னேற்றம். *ஆசிய மகளிர் 7’S ரக்பி சீரிஸில், இந்தியா 0-43 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி.