News October 18, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் நேற்று(அக்.17) இரவு 11 மணி முதல், இன்று(அக்.18) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 18, 2025

மயிலாடுதுறை: ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய கலெக்டர்

image

சீர்காழி அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News October 18, 2025

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா நெல் சிறப்பு பருவ பயிருக்கு காப்பீட்டை நவம்பர் 15-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது www.pmfby.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News October 18, 2025

மயிலாடுதுறை மக்களே உஷாரா இருங்க!

image

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!