News October 18, 2025
முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் – தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் முன்னாள் படை வீரர்கள் தங்கள் குறைகளை இரண்டு பிரதிகளுடன் அடையாள அட்டை தொலைபேசி குறியீட்டுடன் சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News October 18, 2025
கோரம்பள்ளம் குளத்தில் சண்முகையா எம்.எல்.ஏ ஆய்வு

வடக்கு காலங்கரை கிராமத்தில் கடந்த ஆண்டு கனமழையில் கரை உடைந்து பாதிப்புக்குள்ளான கோரம்பள்ளம் குளத்தின் கரைகளை
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மழைக்காலங்களில் குளத்தின் கரைகளின் தன்மை மற்றும் நீர்வரத்தின் அளவை தொடர்ந்து கண்கானிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
News October 18, 2025
தூத்துக்குடி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 18, 2025
தூத்துக்குடியில் PF குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 என்ற வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மாதந்தோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் சாயர்புரத்தில் உள்ள போப் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.