News October 17, 2025
நாளை மிக கவனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு 6 நாள்கள் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். கவனமாக இருங்கள் நண்பர்களே..!
Similar News
News October 18, 2025
சற்றுமுன்: 3 கிரிக்கெட் வீரர்கள் மரணம்

பாக்.,கின் வான்வழி தாக்குதலில் ஆப்கனின் கபீர், சிப்கதுல்லா & ஹாரூன் என்ற 3 கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயிற்சி முடிந்து சொந்த ஊருக்கு சென்றபோது அவர்களுக்கு இக்கதி நேர்ந்துள்ளது. இச்சம்பவத்தை பாக்.,கின் கோழைத்தனம் என குறிப்பிட்ட ஆப்கன் கிரிக்கெட் வாரியம், பாக்., பங்கேற்கும் Tri-nation series-ல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஆப்கன் தெரிவித்துள்ளது.
News October 18, 2025
விஜய்க்காக காத்திருக்கும் இபிஎஸ்: பெங்களூரு புகழேந்தி

அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். விஜய்யிடம் இருந்து எப்போது அழைப்பு வரும் என இபிஎஸ் காத்துக்கொண்டு இருப்பதாக விமர்சித்தார். மேலும், தற்போது அவரின் நடவடிக்கையை பார்த்தால், பாஜகவை கழற்றிவிட்டு, விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர நினைக்கிறார் போல தெரிகிறது எனவும் தெரிவித்தார்.
News October 18, 2025
மூலிகை: ஆயுளை நீட்டிக்கும் அவரைக்காயின் குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ★அவரைக்காயில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது ★அவரை விதைகளை வேக வைத்து சாப்பிட்டால், வாயு தொல்லை நீங்குவதோடு வயிற்று புண்ணையும் ஆற்றும் ★அவரைக்காயில் உள்ள கால்சியம் எலும்புகள் & பற்களுக்கு வலு சேர்க்கிறது ★நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை & கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துகிறது.