News October 17, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 17.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம், பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள மக்கள் குற்ற சம்பவங்கள் நடந்தால் காவல் துறைக்கு உடனடியாக அணுகவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
Similar News
News October 18, 2025
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அமித் இன்று மண்டலம் இரண்டு தீரன் சின்னமலை வடக்கு பேருந்து நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பஸ் ஏற உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News October 18, 2025
திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் பாலன் (26). பனியன் கம்பெனி ஊழியர். இந்நிலையில் நேற்று பல்சர் பைக்கில் பாலன் சென்றுள்ளார். அப்போது தனியார் பேக்கரி அருகே திரும்பிய போது, எதிரே வந்த லாரி பாலன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாலன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 18, 2025
திருப்பூர்: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே <