News October 17, 2025
தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமின்

கரூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை HC-ல் அவரது தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட் நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டது.
Similar News
News October 17, 2025
சர்க்கரை நோயா? ஸ்வீட் எடு தீபாவளி கொண்டாடு

தீபாவளிக்கு வித விதமான ஸ்வீட் ருசித்திட எல்லோரும் விருப்பப்படுவோம். ஆனால் உடலில் சர்க்கரை அளவுகள் அதிகரித்து விடுமோ என்ற பயம் ஏற்படும். எந்த ஸ்வீட்டை எந்த அளவில் சாப்பிட்டால் பிரச்னை ஏற்படாது என தெரிந்துகொள்ளுங்கள். இதில், கிளைசெமிக் குறியீடு (GI) என்பது நாம் சாப்பிடும் உணவானது, உடலின் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை குறிக்கிறது. போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்..
News October 17, 2025
தீபாவளிக்கு 4 நாள் விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு அடுத்த நாளான அக்.21-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே, சனி, ஞாயிறு உள்பட தீபாவளிக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறையாக இருந்தது. தற்போது, அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக அக்.25(சனிக்கிழமை) வேலை நாள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
News October 17, 2025
நாளை மிக கவனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு 6 நாள்கள் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். கவனமாக இருங்கள் நண்பர்களே..!