News October 17, 2025
வழக்கத்தைவிட கூடுதல் மழை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்றுவரை, இயல்பைவிட 42% கூடுதலாக பெய்துள்ளதாக IMD தெரிவித்துள்ளது. நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழக முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த காலகட்டத்தில், இயல்பாக 77.1 மி.மீ. மழை பெய்யும் நிலையில், இன்றுவரை 109.7 மிமீ மழை பெய்துள்ளது.
Similar News
News October 17, 2025
தீபாவளிக்கு 4 நாள் விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு அடுத்த நாளான அக்.21-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே, சனி, ஞாயிறு உள்பட தீபாவளிக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறையாக இருந்தது. தற்போது, அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக அக்.25(சனிக்கிழமை) வேலை நாள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
News October 17, 2025
நாளை மிக கவனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு 6 நாள்கள் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். கவனமாக இருங்கள் நண்பர்களே..!
News October 17, 2025
வயிற்று பிரச்னையை விரட்டும் பூண்டு கஞ்சி!

வாயு தொல்லை, வயிற்றுவலி, வயிற்றுப்புண் போன்ற பிரச்னைகளுக்கு பூண்டு கஞ்சி அருமருந்தாகும். ஒரு குக்கரில் முதலில் எண்ணெய் ஊற்றி மிளகு வெந்தயம், சீரகம் போட்டு தாளிக்கவும். பின்பு பூண்டு சேர்த்து வதக்கி, அதில் அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி சுமார் 6-7 விசில் விட்டு இறக்கவும். இறுதியாக காய்ச்சிய பால் சேர்த்து நன்றாக கிளறினால் கஞ்சி ரெடி.