News October 17, 2025

நாகை: அரசு மருத்துவர் சாலை விபத்தில் பலி

image

வேதாரண்யம் வட்டம், கருப்பம் புலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் நந்தினி. இவர் இன்று 17ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் காரைக்கால் அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மருத்துவர் நந்தினி மரணமடைந்த சம்பவம் வேதாரண்யம் வட்டார பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News October 18, 2025

நாகை: இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க நிதி

image

வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க இஸ்லாமிய மாணவ-மாணவிகளுக்கு, தலா ரூ.36 லட்சம் வீதம் என 10 மாணவர்களுக்கு ரூ.3.60 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளர்கள் இதற்கான விண்ணப்பங்களை http://www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர்

News October 18, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் உருவான தினம் இன்று!

image

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கடந்த 1991-ம் ஆண்டு, அக்டோபர் 18-ம் தேதி நாகை பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. நீண்ட கடற்கரைகள், எழில்மிகு வயல்வெளிகள், பழமை வாய்ந்த கோவில்கள், வேற்றுமை காணாத மக்கள் என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய நாகை மாவட்டத்தில் உங்களுக்கு பிடித்தமான விஷயம் எதுவென்று கமெண்டில் தெரிவிக்கவும்!

News October 18, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

நாகை மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் சிரமங்கள், புகார்கள் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகள் 1800-233-4233 அல்லது 81100 05558 என்ற பேரிடர் கால உதவி மைய எண்களை தொடர்பு கொண்டு தெரிவித்தால், உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!