News October 17, 2025

கடலூர்: 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – சீமான்

image

வேப்பூர் அருகே கழுதூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் குடித்தும், கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கியது, மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News October 18, 2025

கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்ட பௌத்தர்கள் நேரடி மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதற்கான படிவத்தினை <>www.bcmw.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகிற நவ.30க்குள் சென்னை சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

பண்ருட்டி: ரூ.1.75 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்

image

பண்ருட்டியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கடந்த 15-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கண்காணிப்பாளர் சுதா, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பிரகாஷ், புரோக்கர்கள் நாசர்தீன், ராஜேஷ்குமார், ராம்கணேஷ், முகமது ஹனிபா, ஜான் ஆகிய 7 பேர் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!