News October 17, 2025

கடலூர்: 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – சீமான்

image

வேப்பூர் அருகே கழுதூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் குடித்தும், கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கியது, மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 10, 2025

கடலூர்: 21 வயது; 6 வழக்குகள்; பாய்ந்த குண்டாஸ்

image

களையூர் ஏரிக்கரையில் நவ.18ம் தேதி சித்ரா என்பவரது கழுத்திலிருந்து தாலியை பறித்து சென்றது தொடர்பாக, தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வி.அகரம் ஜெயக்குமார் (21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எஸ்.பி உத்தரவின் பெரில், ஜெயக்குமாரை ஆட்சியர் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று (டிச.08) உத்தரவிட்டார்.

News December 10, 2025

கடலூர்: 21 வயது; 6 வழக்குகள்; பாய்ந்த குண்டாஸ்

image

களையூர் ஏரிக்கரையில் நவ.18ம் தேதி சித்ரா என்பவரது கழுத்திலிருந்து தாலியை பறித்து சென்றது தொடர்பாக, தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வி.அகரம் ஜெயக்குமார் (21) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் எஸ்.பி உத்தரவின் பெரில், ஜெயக்குமாரை ஆட்சியர் குண்டர் சட்டத்தில் அடைக்க நேற்று (டிச.08) உத்தரவிட்டார்.

News December 9, 2025

கடலூர் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

டிசம்பா் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். வட்ட வழங்கல் அலுவலா் (அல்லது) நுகா்வோா் குறைதீா்வு அலுவலா் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!