News October 17, 2025
செங்கல்பட்டு மாணவர்களின் கவனத்திற்கு…

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தமிழக அரசின் கல்வி உதவித்தொகையை வழங்குவதாக சில நபர்கள் கல்லூரி மாணவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுடைய வங்கி கணக்கு எண் மற்றும் பிற தகவல்களை பெற்று OTP மூலம் வங்கி கணக்கிலுள்ள பணத்தை ஏமாற்றி திருடும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகிறது எனவும், வங்கி கணக்கு பற்றிய விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 18, 2025
செங்கல்பட்டு மக்களே உஷாரா இருங்க

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்ஸ்டாகிராம்/ முகநூல் / வாட்ஸ் அப்பில் வரும் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம்பி ஆர்டர் செய்து முன்பணம் மற்றும் டெலிவரிக்காக பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். தவறி ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம். *தெரிந்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News October 18, 2025
செங்கல்பட்டு: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

செங்கல்பட்டு மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News October 18, 2025
செங்கல்பட்டு மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

செங்கல்பட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், <