News October 17, 2025

கடலூர்: 10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

image

திட்டக்குடி வட்டம், கழுதூர் கிராமத்தில் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, ராஜேஸ்வரி, ஆகிய 4 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் தவமணி என்ற பெண்ணுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 6, 2025

கடலூர்: டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

image

பெரம்பலூரைச் சேர்ந்தவர் டிரைவர் சிவகுமார் (55). இவர் கடந்த வாரம் மைசூருக்கு சென்றபோது விபத்தில் சிக்கினார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தில் உள்ள தனது அக்கா மகள் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் சிவக்குமார் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 6, 2025

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. இந்த நிலையில் இன்று (நவம்பர் 6) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 31.4 மில்லி மீட்டர், சிதம்பரம் 26.8 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 17 மில்லி மீட்டர், விருத்தாசலம் 14 மில்லி மீட்டர், புவனகிரி 7 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 4.8 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 117.55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News November 6, 2025

இடை நின்ற 1,671 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்கிறது. 16 வட்டாரங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பில் 1671 மாணவர்கள் இடை நின்றது கண்டறியப்பட்டது. அவர்களின் வீடுகளுக்கு சென்று கல்வியின் முக்கியத்துவத்தை கூறி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!