News October 17, 2025

திருப்பூர்: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

Similar News

News November 4, 2025

திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

image

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த அமைச்சர் சாமிநாதன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தற்போது தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள இல.பத்மநாபனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News November 4, 2025

திமுக துணை பொதுச்செயலாளராக சாமிநாதன் நியமனம்

image

தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகவும், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஆகவும் இருப்பவர் சாமிநாதன். இவர் தற்போது திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இன்று திமுக துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமைச்சர் சாமிநாதன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News November 4, 2025

திருப்பூர்: 12th PASS-ஆ? ரூ.71,900 சம்பளம்

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1,429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு முடித்து 18-வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நவ.16-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!