News October 17, 2025

புதுகை: பொது இடத்தில் மது அருந்திய நபர்!

image

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் பெட்ரோல் பங்க் அருகே சத்யராஜ் (37) என்பவர் நேற்று (அக்.16) மது அருந்திக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மழையூர் காவல்துறையினர் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக அவரை கைது செய்து மேலும் அவர் மீது வழக்குப்பதிந்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.

Similar News

News December 16, 2025

புதுகை: பைக்குகள் நேருக்கு நேர் மோதல்-ஒருவர் பலி

image

திருமயம் அடுத்த துளையானூர் சாலையில் தர்மராஜ் (51) என்பவர் நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த ராஜேஷ் (18) மோதியதில் படுகாயம் அடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஸ்ரீபிரியா (33) அளித்த புகாரின் பேரில் திருமயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 16, 2025

புதுகை: மனைவியுடன் மனக்கசப்பு-கணவன் தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் மூன்றாம் வீதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (54). இவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று எல்.என்.புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மது போதையில் மதிவாணன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி கலா ராணி (43) அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 16, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!