News October 17, 2025

பெருந்துறை அருகே வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்!

image

பெருந்துறை புங்கம்பாடியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக பெருந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்கு சென்று தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வாய்க்காலில் மிதந்த சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? தற்கொலை செய்தாரா? என்று விசாரிக்கின்றனர்.

Similar News

News October 18, 2025

ஈரோடு: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதமரின் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு ரபி பருவத்தில், நெல், கரும்பு, வாழை, பயிா்களுக்கு காப்பீடு செய்ய ரபி பருவ பயிர் காப்பீடு செய்துகொள்ளுமாறு ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி அறிவுறுத்தயுள்ளார்.

News October 18, 2025

ஈரோடு: தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு!

image

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிவோர். தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். அவ்வாறு பயணம் செய்வோர். குறைந்த கட்டணத்தில் பயணிக்க இங்கு <>கிளிக்<<>> செய்து அரசு பேருந்தில் உங்கள் பயணச்சீட்டை பதிவு செய்யுங்கள்! யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 18, 2025

ஈரோடு: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!