News April 16, 2024
லாரன்ஸ் பிஷ்னோய் கதையை முடித்து விடுவோம்

லாரன்ஸ் பிஷ்னோய் கதையை முடித்து விடுவோமென மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 2 தினங்களுக்கு முன் மும்பையில் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சல்மான் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பின்னர் பேசிய ஷிண்டே “அதுபோன்று மீண்டும் நடைபெறாது. ரவுடிக் கும்பல்களின் மோதலை அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
Similar News
News November 15, 2025
விஜய்க்கு அரசியல் அட்வைஸ் கொடுத்த ரோஜா

விஜய் அரசியலில் சாதிக்க வேண்டும் என்றால், மக்களோடு மக்களுக்காக களப்பணியாற்ற வேண்டும் என ரோஜா தெரிவித்துள்ளார். தேர்தலை பொறுத்தவரை கடைசி 2 மாதங்கள்தான் முக்கியமானது. அப்போது யார் மக்களை கவர்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் வெற்றி பெறுவார்கள். பணம் கொடுத்தோ, உண்மை, பொய் என எதையாவது சொல்லியோ மக்களை கவர வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
பிஹாரில் CM ஸ்டாலின் பேரணி சென்ற தொகுதியின் ரிசல்ட்

ECI-ன் SIR-ஐ எதிர்த்து பிஹாரின் முசாபர்பூர் தொகுதியில், MGB கூட்டணி கட்சி தலைவர்களுடன் CM ஸ்டாலின் பேரணி சென்றார்.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பிரசாரமும் செய்தார். அந்த தொகுதியில் பாஜகவின் ரஞ்சன் குமார் 1,00,477 வாக்குகளையும், காங்கிரஸின் பிஜேந்திரா சௌத்ரி 67,820 வாக்குகளை பெற்றுள்ளனர். இறுதியில் 32,657 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
News November 15, 2025
நவம்பர் 15: வரலாற்றில் இன்று

*1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. *1949 – மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். *2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. *1875 – விடுதலை போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்தநாள். *1982 – காந்தியவாதி வினோபா பாவே உயிரிழந்த நாள். *1986 – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்தநாள்.


