News April 16, 2024

லாரன்ஸ் பிஷ்னோய் கதையை முடித்து விடுவோம்

image

லாரன்ஸ் பிஷ்னோய் கதையை முடித்து விடுவோமென மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 2 தினங்களுக்கு முன் மும்பையில் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சல்மான் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பின்னர் பேசிய ஷிண்டே “அதுபோன்று மீண்டும் நடைபெறாது. ரவுடிக் கும்பல்களின் மோதலை அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

Similar News

News August 15, 2025

5000 சீன வீரர்களை ஓடவிட்ட 120 இந்திய வீரர்கள்

image

இது திரைப்பட கதையல்ல, 1962 இந்திய- சீன போரில் ஈடுபட்ட நம் வீரர்களின் உண்மைக் கதை. லடாக்கில், 16,000 அடி உயரத்தில் ரேசாங் லா பனிமலையில் 5000 வீரர்களுடன் சீனப்படை முன்னேறியது. அவர்களை வெறும் 120 வீரர்களுடன் எதிர்கொண்டார் மேஜர் சைத்தான் சிங் பாட்டி. அலையலையாய் வந்த சீனர்களை, கடைசிமூச்சு உள்ளவரை எதிர்த்து போரிட்டனர் நம் வீரர்கள். 110 பேர் வீரமரணம் அடைந்தாலும், இறுதியில் லடாக்கை காத்தது வீரவரலாறு!

News August 15, 2025

அப்பா மன்னித்து விடுங்கள்.. உருக்கமான தற்கொலை கடிதம்

image

அப்பா தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் உங்கள் மீது அவதூறு சுமத்தப்பட்டுள்ளது. நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். ஜார்க்கண்ட் பலாமுவில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் சுஷாந்த்(30) தனது தற்கொலைக்கு முன்பு எழுதிய வரிகளை இவை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மன அழுத்தத்தில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News August 15, 2025

சுதந்திர தின உரையில் RSS-ஐ புகழ்வதா? ஓவைசி காட்டம்

image

சுதந்திர தின உரையில் RSS-ஐ புகழ்ந்ததன் மூலம், PM மோடி விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக ஐதராபாத் MP ஓவைசி விமர்சித்துள்ளார். விடுதலை போராட்டத்தில் RSS எந்த பங்களிப்பையும் செய்யவில்லை எனவும், ஆங்கிலேயர்களுக்கு RSS சேவகம் செய்ததாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், சீனாவை விட சங் பரிவாரங்களின் வெறுப்பும், பிரித்தாளும் கொள்கையும் தான் நமது மிகப்பெரிய எதிரிகள் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!