News April 16, 2024

பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு

image

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோஸ்ட்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இந்த வீரதீர செயலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். நக்சலிஸம் நாட்டின் தடையாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர், விரைவில் நமது நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 10, 2025

Tarrif: மோடி-டிரம்ப் நட்பு எங்கே? ரகுராம் ராஜன் கேள்வி

image

PAK-க்கு 19% வரியை மட்டுமே விதித்துள்ள USA, இந்தியாவுக்கு 50% வரியை விதித்துள்ளதாக RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் விமர்சித்துள்ளார். வரி விதிப்பில், PM மோடி – டிரம்ப் நட்பு எங்கே என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதனால் எளிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 1971-ல் Indo-Pak போரின் போது PAK-க்கு சாதகமாக USA செயல்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்காவை நம்ப முடியாது என்று கூறியுள்ளார்.

News November 10, 2025

பொதுச் சின்னத்துக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

image

ECI-யிடம் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதேசமயம் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிலையில் 2026 தேர்தலுக்காக பதிவு செய்த கட்சிகள், நாளை முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என ECI தெரிவித்துள்ளது.

News November 10, 2025

அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்கிறதா? EPS

image

அதிமுகவில் EPS மகனின் தலையீடு இருப்பதாக சமீபத்தில் செங்கோட்டையன் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், வேறு குற்றச்சாட்டு இல்லாததால் அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்கிறது என செங்கோட்டையன் கூறுவதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், தனது மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளீர்களா என்ற கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார்.

error: Content is protected !!