News April 16, 2024
பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோஸ்ட்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இந்த வீரதீர செயலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். நக்சலிஸம் நாட்டின் தடையாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர், விரைவில் நமது நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 15, 2025
அப்பா மன்னித்து விடுங்கள்.. உருக்கமான தற்கொலை கடிதம்

அப்பா தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் உங்கள் மீது அவதூறு சுமத்தப்பட்டுள்ளது. நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். ஜார்க்கண்ட் பலாமுவில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் சுஷாந்த்(30) தனது தற்கொலைக்கு முன்பு எழுதிய வரிகளை இவை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மன அழுத்தத்தில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News August 15, 2025
சுதந்திர தின உரையில் RSS-ஐ புகழ்வதா? ஓவைசி காட்டம்

சுதந்திர தின உரையில் RSS-ஐ புகழ்ந்ததன் மூலம், PM மோடி விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக ஐதராபாத் MP ஓவைசி விமர்சித்துள்ளார். விடுதலை போராட்டத்தில் RSS எந்த பங்களிப்பையும் செய்யவில்லை எனவும், ஆங்கிலேயர்களுக்கு RSS சேவகம் செய்ததாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், சீனாவை விட சங் பரிவாரங்களின் வெறுப்பும், பிரித்தாளும் கொள்கையும் தான் நமது மிகப்பெரிய எதிரிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
ஆரவாரத்துடன் வெளியான வார் 2வுக்கு பெரும் அடி

ரஜினியின் கூலியுடன் களமிறங்கிய ‘வார் – 2’ படம் முதல் நாளில் ₹52.5 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘வார் 2’ அதன் முதல் பாக வசூலைக்(₹53 கோடி) கூட தொடவில்லை. படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் குறையும் என கூறப்படுகிறது. அதேவேளையில், ரஜினியின் <<17409522>>‘கூலி’, ₹140 கோடி<<>> வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.