News April 16, 2024
பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோஸ்ட்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இந்த வீரதீர செயலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். நக்சலிஸம் நாட்டின் தடையாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர், விரைவில் நமது நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: கொல்லாமை ▶குறள் எண்: 322 ▶குறள்: பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. ▶பொருள்: இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.
News April 30, 2025
சூர்யவன்ஷியின் அடுத்த இலக்கு இதுதான்!

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக இன்னும் கடுமையாக உழைப்பேன் என RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். நாட்டுக்காக விளையாடி, சிறந்த பங்களிப்பை கொடுப்பதே தனது லட்சியம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் கொண்டாடப்படுவதற்கு மூலக் காரணம் தனது பெற்றோர்கள் பட்ட கஷ்டம் தான் எனவும் கூறியுள்ளார். GT-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 35 பந்துகளுக்கு சதம் விளாசி பல சாதனைகளை அவர் படைத்தார்.
News April 30, 2025
PAK-கிற்கு பதிலடி? இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் PM மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், PAK-கிற்கு எதிராக ராணுவ பதிலடி உள்பட முக்கிய விஷயங்கள் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த 23-ம் தேதி கூடிய பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், சிந்து நதி நீர் நிறுத்தம் உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.