News October 17, 2025

BREAKING: விஜய் உடன் சந்திப்பு.. கண்ணீர் மல்க ஆறுதல்!

image

கரூர் வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வந்த மதியழகன், பவுன்ராஜை விஜய் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, எதையும் சமாளிப்போம், நான் இருக்கிறேன் என விஜய் கூறியுள்ளார். மேலும், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலைமையை அவ்வப்போது தன்னிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், விரைவில் அவர்களை சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது, மதியழகனை கண்ணீர் மல்க கட்டியணைத்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.

Similar News

News October 18, 2025

ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் டும் டும் டும்!

image

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக அவரது காதலர் பலாஷ் முச்சல் தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குநரும், இசையமைப்பாளருமான பலாஷ் முச்சல், இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, விரைவில் ஸ்மிருதி மந்தனா இந்தூரின் மருமகளாவார் என கூறினார். பலாஷ் முச்சலும், ஸ்மிருதி மந்தனாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 18, 2025

BREAKING: 20 மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்

image

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News October 18, 2025

வில்வித்தை World Cup: இந்திய வீராங்கனை சாதனை!

image

ஜோதி சுரேகா உலகக்கோப்பை வில்வித்தை இறுதி போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். சீனாவில் நடைபெற்று வரும் போட்டியில், பிரிட்டன் வீராங்கனையை 150-145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அவர் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஏற்கெனவே 2 முறை உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று, முதல் சுற்றிலேயே வெறியேறியிருந்த நிலையில், தற்போது பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

error: Content is protected !!