News April 16, 2024

அதிமுக அழுத்தம் அளித்ததால் தான் ₹1,000 வந்தது

image

அதிமுக அழுத்தம் கொடுத்ததால் தான் மகளிருக்கு ₹1,000 உரிமைத்தொகையை திமுக அரசு அளித்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், சட்டமன்றத்தில் தொடர்ந்து 3 முறை அனைத்து மகளிருக்கும் ₹1,000 உரிமைத்தொகை வழங்க வலியுறுத்தியதாகவும், தேர்தலுக்கு முன்னர் அனைவருக்கும் என கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்களுக்கு பிறகு தகுதி அடிப்படையில் ₹1,000 வழங்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Similar News

News August 14, 2025

தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை மீது வழக்கு

image

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை சந்திக்க கிளம்பிய தமிழிசை அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இருப்பினும் தடையை மீறி போராட்டக்களத்துக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். போலீசார் தனது வீட்டை சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும் என பேட்டியில் கேட்டிருந்தார். இந்நிலையில், கோர்ட் உத்தரவை மீறி தூய்மை பணியாளர்களை சந்தித்ததாக கூறி தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News August 14, 2025

கழிப்பறையிலும் திமுக ஊழல்: இபிஎஸ்

image

ஒரு நாளைக்கு ஒரு கழிப்பறையை தூய்மை செய்ய ₹800 என ₹1,000 கோடிக்கு சென்னையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கழிப்பறையிலும் திமுக ஊழல் செய்திருப்பதாகவும் விமர்சித்தார். ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருந்தபோது தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு சென்று, அவர்களுடன் தேநீர் சாப்பிட்டு ஆதரவாக பேசினார். ஆனால் தற்போது அவர்கள் போராட்டத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை என்றும் கூறினார்.

News August 14, 2025

ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தரும் அம்பிகை!

image

தஞ்சாவூர், திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்பிகை ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தருகிறார். தன்னை நினைத்து தவம் இருந்த அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன், ஜோதி ரூபமாக காட்சி தந்தார். ஒற்றை காலை கீழும், மற்றொரு காலை ஜோதி ரூபத்தில் இருந்த ஈசன் மீதும் வைத்து, அம்பிகை ஈசனைத் தழுவினார். இக்கோயில் வழிபட்டால், மனக்கசப்பால் பிரிந்து போன தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என நம்பப்படுகிறது.

error: Content is protected !!