News October 17, 2025
171 நாள்களுக்கு பிறகு EPS தான் முதல்வர்: நயினார்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், போக்குவரத்து ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் என யார் கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் நயினார் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், திமுக ஆட்சியின் முடிவு நாளை மக்கள் எண்ணிக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும், 171 நாள்களுக்குப் பிறகு நம்ம(NDA) ஆட்சி மலரும் எனவும், EPS முதல்வராவார் என்றும் சூளுரைத்தார்.
Similar News
News October 18, 2025
தீபாவளியும் புது டிரெஸ்ஸும்..

இப்போ போரடிச்சா ஷாப்பிங் போய், துணி வாங்குறோம். ஆனா, ஒரு காலத்துல தீபாவளி, பொங்கல் வந்தா மட்டும்தான் புது துணி. அதுக்காக வருஷமெல்லாம் வெயிட்டிங்கில் இருப்போம். வளருற பசங்களா இருந்தா அந்த துணியும் கொஞ்சம் லூசா தான் கிடைக்கும். தீபாவளிக்கு 2 நாள் முன்ன வீட்டுக்கு டிரெஸ் வந்தாலும், அத போட்டு பாக்க முடியாது. தொட்டு பாத்துட்டே உக்கார்ந்துட்டு இருக்கணும். உங்க வாழ்க்கை’ல மறக்க முடியாத தீபாவளி எது, ஏன்?
News October 18, 2025
வரலாற்று சாதனை இந்தியாவில் ₹8,97,000 கோடி தங்கம்!

இந்தியா முதல்முறையாக $100 பில்லியன் டாலர் தங்க கையிருப்பை தாண்டியுள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, சரியாக குறிப்பிட்டால் தற்போது ₹8,97,000 கோடி தங்க கையிருப்பு உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ரிசர்வ் வங்கி கையிருப்பு மதிப்பு மேலும் உயரும் எனவும் நிபுணர்கள் கணிக்கின்றனர். மேலும், ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பில் இது 14.7% ஆகும்.
News October 18, 2025
ரோஹித்துடன் சண்டையா? சுப்மன் கில் ஓபன் டாக்

கேப்டன் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து, கில் மீது ரோஹித் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தாங்கள் எப்போதும் போலவே தற்போதும் பழகி வருவதாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ரோஹித் அனுபவசாலி என்றும் பல விஷயங்களில் அவரிடம் தான் அறிவுரை கேட்பதாகவும் தெரிவித்தார். இந்திய அணிக்கு கேப்டனாக கில் தேர்வு செய்யப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீங்க?