News October 17, 2025

மழைக்காலத்தில் இந்த கசாயம் குடிங்க!

image

மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் பிரச்னையில் இருந்து தப்பிக்க, இந்த கசாயத்தை பருகும் படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மிளகு, இஞ்சியை நன்கு இடித்து கொள்ளவும். தண்ணீரில் ஓமவள்ளி இலை, தூதுவளை, துளசி ஆகியவற்றை சேர்த்து கொதித்ததும், அதில் மிளகு, இஞ்சியை சேர்த்து 2-3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பிறகு, வடிகட்டி, ஆற வைத்தால் மூலிகை கசாயம் ரெடி. இதனை நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News October 18, 2025

‘யுத்த நாயகன்’ காலமானார்

image

நாட்டுக்காக 3 போர்களில் பங்கேற்று ‘War Hero’என புகழ்பெற்ற கரோடி திம்மப்பா ஆல்வா(85) காலமானார். மங்களூருவில் பிறந்த இவர், 1971 போரின்போது, தாக்குதலுக்கு ஆளாகி சிட்டகாங் வனப்பகுதியில் உயிருக்கு போராடி மீண்டு வந்தார். தனது போர் அனுபவங்களை ‘Garodi Maneyinda Sena Garadige’ புத்தகமாக எழுதியுள்ளார். மக்கள் சேவையில் ஆர்வம் கொண்ட அவர் தனது உடலையும், KS ஹெக்டே மருத்துவ அகாடமிக்கு தானம் செய்துள்ளார். #RIP

News October 18, 2025

ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்!

image

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24-ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 21-ம் தேதியே உருவாகிறது என IMD தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தென் கிழக்கு அரபிக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால் வங்கக்கடல், அரபிக்கடலில் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியை சந்திக்கும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News October 18, 2025

தீபாவளியும் புது டிரெஸ்ஸும்..

image

இப்போ போரடிச்சா ஷாப்பிங் போய், துணி வாங்குறோம். ஆனா, ஒரு காலத்துல தீபாவளி, பொங்கல் வந்தா மட்டும்தான் புது துணி. அதுக்காக வருஷமெல்லாம் வெயிட்டிங்கில் இருப்போம். வளருற பசங்களா இருந்தா அந்த துணியும் கொஞ்சம் லூசா தான் கிடைக்கும். தீபாவளிக்கு 2 நாள் முன்ன வீட்டுக்கு டிரெஸ் வந்தாலும், அத போட்டு பாக்க முடியாது. தொட்டு பாத்துட்டே உக்கார்ந்துட்டு இருக்கணும். உங்க வாழ்க்கை’ல மறக்க முடியாத தீபாவளி எது, ஏன்?

error: Content is protected !!