News October 17, 2025
ஓமலூரில் சிறுவனை மலம் அள்ள வைத்த கொடூரம்!

சேலம்: ஓமலூர் அருகே உள்ள கொங்குபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (41). இவரது மகன் பவித்ரன் (15) அருகே உள்ள தோட்டத்தில், மலம் கழித்து விட்டாதாக கூறப்படுகிறது. இதனை கண்ட தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ரமேஷ் (51) என்பவர் சிறுவனை மலம் அள்ள வைத்தாக தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்ட போலீசார் போலீசார், வன்கொடுமை சட்டத்தில் ரமேஷை கைது செய்தனர்.
Similar News
News October 17, 2025
சேலம் அருகே மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் பலி!

சேலம் ரெட்டிபட்டி ஜங்ஷன் ராம் தியேட்டர் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த முதியவர் யார்? என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை!
News October 17, 2025
தீபாவளி பண்டிகை: சேலம் மக்களே ஜாக்கிரதை!

தீபாவளி ஷாப்பிங் செல்லும்போது, இருசக்கர வாகனத்தைப் பூட்டிவிட்டீர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளவும். மேலும் அதிக நகைகள் அணிவதையும், முன்பின் தெரியாதவர்களிடம் பேசுவதையும் தவிர்க்கவும் என சேலம் போலீசார் அறிவுறை.மேலும் உதவிக்கு காவல் துறை: 100, தீயணைப்புத்துறை: 101 ஆம்புலன்ஸ் 102, பெண்களுக்கான உதவி எண்: 1091, காணாமல்போன குழந்தைகள் மற்றும் பெண்கள் புகாரளிக்க: 1094 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.SHAREit
News October 17, 2025
மேட்டூரில் பெயிண்டர் கொலை: ஒருவர் சிக்கினார்!

சேலம்: மேட்டூர் கேம்ப் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் மணிகண்டன் ( 27) என்பவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து நடத்திய தீவிர விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் சிக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.