News October 17, 2025

திருச்சியில் 23 பேர் கைது!

image

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் புதிய பென்சன் திட்டம் (சி.பி.எஸ்) ஒழிப்பு இயக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய 23 பேரை திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் கைது செய்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Similar News

News October 18, 2025

திருச்சி: அமெரிக்காவிற்கு பார்சல் சேவை தொடக்கம்

image

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் அமெரிக்காவிற்கு பார்சல் மற்றும் தபால் அனுப்பும் வசதி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 12 தபால் நிலையங்களிலும் இந்த சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

News October 18, 2025

திருச்சி: B.E போதும், இஸ்ரோவில் வேலை ரெடி!

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

திருச்சி: தீபாவளி ஆஃபர் – மக்களே உஷார்!

image

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் ‘1930’ என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!