News October 17, 2025

தி.மலை: மின்னல் தாக்கி இளைஞர் பலி!

image

ஆரணி அருகே சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் ஏழுமலை (22). நேற்று வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கி உள்ளார். இந்த நிலையில், இடி தாக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 18, 2025

தி.மலை:ஆன்லைன் மோசடி: பணத்தை 48 மணிநேரத்தில் மீட்கலாம்!

image

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன், உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும். ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். தி.மலை மக்களுக்கு இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) <>இந்த லிங்க் <<>>மூலமாகவோ புகார் அளித்து, வங்கிக்கு தகவல் அளித்தால், பணத்தை விரைவாக மீட்கலாம். ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

தி.மலையில் ஆயுள் அதிகரிக்க செய்யும் கோயில்

image

தி.மலை மாவட்டம் ஆரணி, எரிகுப்பதில் ஏரிக்குப்பம் எந்திர சனீசுவரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழையமான கோயிலாகும், இந்த கோயிலுக்கு வந்து சனி பகவானை வழிபடுவதின் வழியே ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் வழக்குகளில் வெற்றிபெற இந்த சனிபகவான் அருள்புரிந்து வருகிறார். திருமண தடையை அகற்றி பல திருமணங்கள் நடந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஷேர்.

News October 18, 2025

தி.மலை: மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

image

தி.மலை உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து தி.மலை மாவட்டம் மற்றும் உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுத்தாலே போதும். உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து இ-சேவை மையங்களையும் 1 நொடியில் உங்களுக்கு காட்டிவிடும். நீங்கள் மேப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!