News October 17, 2025
சேலத்தில் விபத்து: ஒருவர் பலி!

சேலம், கோட்டையை சேர்ந்தவர் ஜாபீர் (40) என்பவர் நேற்று முன்தினம் அண்ணா மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த குமாரசாமிப்பட்டியை சேர்ந்த வினோத் (30) ஓட்டி வந்த யமஹா பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இருவரும் ஹெல்மெட் அணியாததால் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாபீர் உயிரிழந்தார். விபத்து குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 18, 2025
சேலம்:வாலிபருடன் பழகிய மனைவி கொலை!

சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரதிதேவி (28). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது ரதிதேவி, தான் வேலை பார்க்கும் இடத்தில் ஒருவருடன் பழகிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், வீட்டில் இருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாகக் குத்தினார். இதில் ரதிதேவி உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் கண்ணனைப் கைது செய்து விசாரணை
News October 18, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் மற்றும் இயற்கை இடர்பாடுகளில் சிக்கிய பொதுமக்களை பாதுகாப்பதற்காக அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரர்களின் விபரம் வெளியிடப்பட்டது.
News October 17, 2025
சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <