News October 17, 2025

நாமக்கல்: இணைய வழி சைபர் மோசடி எச்சரிக்கை

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களை குறி வைத்து குறைந்த விலையில் பட்டாசு மற்றும் பலகாரங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறி இணையவழி சைபா் குற்றவாளிகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட மோசடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சைபர் உதவி எண்: 1930 அல்லது www.cybercrime.gov.in மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News December 7, 2025

நாமக்கல்: கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள்!

image

கிருஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு, நாமக்கல் வழியாக பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு 2 வாரங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மைசூரில் இருந்து மாண்டியா, கெங்கேரி, பெங்களூர் சிட்டி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி வரை செல்கிறது. இதனால் பல்வேறு சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று டிசம்பர்-7ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இதே விலை நீடித்து வருகிறது.

News December 7, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.07) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138) ,வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (மருதுபாண்டி – 965595530) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!