News October 17, 2025
தார்சாலை பணிகளை பார்வையிட்ட கலெக்டர்

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பூமாண்டஹள்ளி ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் கீழ் மோதூர் முதல் மோதூர் காலனி வரை தார்சாலை அமைக்கப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் (அக்.16) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமன் உள்ளிட்ட, தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News December 9, 2025
தருமபுரி: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News December 9, 2025
தருமபுரி: நாய் குறுக்கே வந்ததால் காவலர் இறப்பு!

தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தமிழழகன்(56). இவர் நேற்று (டிச.07) இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது, வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் அருகில் திடீரென நாய் குறுக்கே வந்துள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் தமிழழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 9, 2025
தருமபுரி: பிக்கப் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு!

தருமபுரியில், கோபாலபுரம் சர்க்கரை ஆலை நான்கு ரோட்டில் பொம்மிடி அருகில் நேற்று பிக்கப் வாகனம் மோதி பெண் உயிரிழந்துள்ளார். இதில், புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபு அவரது மகன் அருள், ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. மேலும், இதுகுறித்து எ.பள்ளிபட்டியில் நேற்று (டிச.7) போலிசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


