News October 16, 2025

வேலூர்: குட்கா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

image

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து, புதுச்சேரிக்கு காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பவரை விழுப்புரம் அருகேயுள்ள அரசூர் பகுதியில் திருவெண்ணை நல்லூர் போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்று சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 120 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News October 17, 2025

விழுப்புரம் காவல்துறை எச்சரிக்கை!

image

தீபாவளி பண்டிகையையொட்டி இளைஞர்கள் வாகனங்களை அதிவேகமாக இயக்கி சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2025

விழுப்புரம்: 10th போதும் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் <>விண்ணப்பிக்கலா<<>>ம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி அக்.23. ஷேர் பண்ணுங்க

News October 17, 2025

விழுப்புரம்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

விழுப்புரம் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <>”TNEB Mobile App”<<>> பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!