News April 16, 2024
குடும்ப அரசியலால் இளைஞர்கள் முன்னேறவில்லை

திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற முடியவில்லை என ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி பிரசாரத்தில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், வளர்ந்த இந்தியாவுக்கு தமிழ்நாடு தலைமை தாங்க வேண்டிய தருணம் இது எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News November 10, 2025
பொதுச் சின்னத்துக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

ECI-யிடம் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதேசமயம் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிலையில் 2026 தேர்தலுக்காக பதிவு செய்த கட்சிகள், நாளை முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என ECI தெரிவித்துள்ளது.
News November 10, 2025
அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்கிறதா? EPS

அதிமுகவில் EPS மகனின் தலையீடு இருப்பதாக சமீபத்தில் செங்கோட்டையன் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், வேறு குற்றச்சாட்டு இல்லாததால் அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்கிறது என செங்கோட்டையன் கூறுவதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், தனது மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளீர்களா என்ற கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார்.
News November 10, 2025
வழுக்கை தலை.. எந்த நாட்டில் அதிகம் தெரியுமா?

ஆண்களுக்கு வழுக்கை தலை பெரும் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. சிலர் மட்டுமே இதனை வருத்தமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். பலரும் இதற்காக பெரும் கவலை அடைகின்றனர். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வழுக்கைத் தலையுடன் உள்ள ஆண்கள் எந்தெந்த நாடுகளில் உள்ளனர் என்று தெரியுமா? மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இந்தியா இருக்கா, இல்லையா?


