News October 16, 2025

விருதுநகர்: ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோணுகாலில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு நடந்த ஆட்டுச்சந்தையில் ரூபாய் 3 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆனதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். நல்ல விலை போனதால் வியாபாரிகளும், ஆட்டின் உரிமையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News October 17, 2025

திபாவளிக்கு வழிமுறைகளை பின்பற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்

image

விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினை விபத்து, ஒலி, மாசற்ற பண்டிகையாக கொண்டாடும் பொருட்டு பொதுமக்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு ஆட்சியர் சுகபுத்ரா அறிவுறுத்தியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலசங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

அருப்புக்கோட்டையில் காய்ச்சல் முகாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று அருப்புக்கோட்டை காரையான்பட்டி தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது. மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

News October 16, 2025

தமிழகத்தில் அனுமதி கிடையாது – தங்கம் தென்னரசு

image

குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் இன்றைய சட்டப்பேரவையில் குமரி மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்க வேண்டும் என கூறினார். குமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை என தமிழகத்தில் எந்த வகையிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கமாட்டோம் உறுதியளிக்கிறேன். மத்திய அரசு மக்களின் கருத்தை கேட்காமல் இதை நிறைவேற்றுவோம் என கூறுவதாக திருச்சுழி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!