News October 16, 2025
செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News October 17, 2025
ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் தீப ஒளி திருநாள் விழாவை கொண்டாட சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். இதனால் இன்று முதலே ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
News October 16, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
கிளாம்பாக்கம்: தீபாவளி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் (அக்.16) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக வழக்கமான மாநகர பேருந்துகளுடன் 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இன்று முதல் அக்.19ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வெளியூர் பேருந்துகள் செல்லும் இடம், அவை நிற்கும் பிளாட்பாரம் எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.