News April 16, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றுகின்ற பிற மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலர்கள் தபால் வாக்கு அளிக்க ஏதுவாக படிவம் 12 பிற மாவட்டங்களுக்கு 1437 வாக்காளர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டது. இதில் 1290 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் மீதமுள்ள வாக்குகள் விரைந்து பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

மயிலாடுதுறை: நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் படைவீரர் கொடிநாள் விழாவில் முன்னாள் படை வீரர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார். நிகழ்வில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

News December 8, 2025

மயிலாடுதுறை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 8, 2025

மயிலாடுதுறை: 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்!

image

செம்பனார்கோவிலை சேர்ந்தவர் குமார் (50). இவர் வீட்டில் அரசால் தடை செய்யபட்ட குட்கா மற்றும் வெடி பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் காவல்துறையினர் சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட 78.5 குட்கா பொருட்கள் & வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் 100 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்

error: Content is protected !!