News October 16, 2025
திருமங்கலத்தில் குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

திருமங்கலம் அசோக் நகர் மூவேந்திரன் 34 மின் வியாபாரி மனைவி குருசியா 23 அவருக்கு 4 வயதில் பெண் குழந்தை 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன் குடிபழக்கத்தால் விரக்தி அடைந்த, குருசியா நேற்று குழந்தைகளை தூக்கிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற போது குழந்தைகள் வலியால் துடிப்பதை பார்த்து அவர் உடனே தன்னை விடுவித்து குழந்தைகளையும் மீட்டார், மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 16, 2025
மதுரை மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..? இத பண்ணுங்க

மதுரை மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.
News October 16, 2025
மதுரையில் கூலி படையை சேர்ந்த 6 பேருக்கு ‘குண்டாஸ்’

மதுரை பார்க் டவுனை சேர்ந்தவர் ராஜ்குமார், கல்லாணை தொழிலில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த மாதம் கூலிப்படையை ஏவி ராஜ்குமாரை கல்லாணை கொலை செய்தார். இது தொடர்பாக கல்லாணை, அவரது மகன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதான நிலையில், கூட்டாளிகளான மகபூப்பாளையம் ஜெயராஜ் 41, மாடக்குளம் முரளி 50, சிக்கந்தர் சாவடி லாரன்ஸ் 51, ஆகியோரும் இச்சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
News October 16, 2025
மதுரையில் கொத்தனார் காயங்களுடன் மர்மச்சாவு

மதுரை கோச்சடை பகுதி ஜெயபாண்டி 49 கொத்தனார் இவரது மகன் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜெயபாண்டி வீட்டிலிருந்து வெளியேறி நாகமலை புதுக்கோட்டையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த நிலையில் கோச்சடை பஸ் ஸ்டாப் முன்பாக நேற்று முகத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மனைவி சிவகாமி அளித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.