News October 16, 2025

விருதுநகர்:பட்டாசு தொழிலாளி பலி

image

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை முத்துச்சாமிபுரம் சேர்ந்தவர் காளிமுத்து, 26. பட்டாசு ஆலை தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 8:00மணிக்கு எதிர்கோட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊர் திரும்பினார்.எதிரில் சிவகாசியை சேர்ந்த காசிராஜன், 23 .ஒட்டி வந்த லோடு ஆட்டோ அவர் மீது மோதியது.சம்பவ இடத்தில் அவர் பலியானார்.ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 16, 2025

BREAKING விருதுநகருக்கு வானிலை மையம் எச்சரிக்கை

image

தமிழகம், கேரளா, ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழையும், நாளை(அக்.17) தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

விருதுநகர்: மழை காலத்தில் கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

image

விருதுநகர் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.

News October 16, 2025

சதுரகிரிக்கு வருகிற அமாவாசை நாட்களில் செல்ல தடை

image

சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஐப்பசி மாதம் சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு மலையேறி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!