News October 16, 2025
கோவையில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

விருதுநகரை சேர்ந்த சித்ரவேல், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் விளம்பரப்படுத்தினார். இதனை நம்பி நிறுவனத்தில் பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். முதலீடு செய்தவர்களுக்கு பணம் வரவில்லை. விசாரித்ததில் போலி நிறுவனம் என தெரிந்தது. பாதிக்கப்பட்டோர் டெல்லி சிபிஐயில் அளித்த புகாரின் வழக்கு பதிந்து, சித்ரவேலை தேடிய நிலையில், நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
Similar News
News October 17, 2025
கோவை: மழைக்கால அவசர எண்கள் வெளியீடு

தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி அவசர கட்டுப்பாட்டு மைய எண் 0422-2302323 மற்றும் வாட்ஸ் அப் 81900-00200 ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மண்டல வாரியாக — வடக்கு 89259-75980, கிழக்கு 89258-40945, மத்திய 89259-75982, தெற்கு 90430-66114, மேற்கு 89259-75981 ஆகிய எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
News October 16, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (16.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
கோவையில் பரபரப்பு: குப்பை தொட்டியில் குழந்தை சடலம்!

கோவை அம்மன் குளம் சாலையில் உள்ள பொதுக்கழிப்பறை அருகே, குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனை நேற்று மாலை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்ய வந்தபோது, பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி, ஜிஹெச் அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து விசாரிக்கின்றனர்.