News October 16, 2025

தருமபுரி: கடை உரிமையாளர்களுக்கு பறந்த உத்தரவு!

image

தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறும், உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ரெ.சதீஸ் உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News October 16, 2025

இனி பதிவுசெய்யப்பட்ட சீட்டு நிறுவனங்கள் மட்டுமே அனுமதி

image

சீட்டு நிறுவனங்கள் சீட்டு நிதி சட்டம் 1982-ன் கீழ் மட்டுமே செயல்படலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (அக்.16) வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே சட்டபூர்வமாக சீட்டு நடத்த அனுமதிக்கப்படும். இச்செய்தி மூலம் பொதுமக்கள் அங்கீகரிப்பு இல்லாத சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யாதிருப்பது அவசியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News October 16, 2025

டாக்டர் அம்பேத்கர் விருது விண்ணப்பிக்கலாம்

image

2025ஆம் ஆண்டிற்கு பட்டியல இன மக்களின் முன்னேற்றத்திற்கான தொண்டாற்றி வரும் தன்னார்வலர்களுக்கு டாக்டர்.அம்பேத்கர் விருது வழங்கப்படுகின்றது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம் சென்னை-05 அறிந்து கொள்ளலாம்.

News October 16, 2025

தருமபுரி: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

image

தருமபுரி மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம்.

error: Content is protected !!