News October 16, 2025
பெரம்பலூர்: போலீஸ் ஜீப் மோதி விவசாயி பலி

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கராஜ் (55). இவர் அக்.14 இரவு தனது பைக்கில் தாழை நகர் அருகே சென்றபோது, இரவு ரோந்து பணியில் இருந்த அரும்பாவூர் காவல் நிலைய ஏட்டு பிரபு ஓட்டி சென்ற போலீஸ் ஜீப், ரெங்கராஜ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 16, 2025
பெரம்பலூர்: சிலிண்டர் வேண்டுமா? ஒரு Message போதும்!

பெரம்பலூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 16, 2025
பெரம்பலூர்: வருவாய்த்துறை ஊழியர்கள் கண்டனம்

இன்று (16.10.2025) காலை பெரம்பலூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர். இது குறித்து வருவாய் சங்க மாவட்ட பொருளாளர் குமரி ஆனந்தன் கூறுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனே அரசு செயல்படுத்திட வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
News October 16, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ம் தேதி வழக்கு விசாரணையின் போது நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பை வீசி அவமதித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், விசிக கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்கள் ரத்தினவேல் மற்றும் கலையரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.