News October 16, 2025

புதுவையில் போலீசார் தீவிர ரோந்து பணி

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுவையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தினர். மேலும், பாதுகாப்புடன் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

Similar News

News October 16, 2025

புதுச்சேரி: மனைவி கண்டித்ததால் தற்கொலை

image

தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் மனோகர் (48), மனைவி கிருஷ்ணகுமாரி இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மனோகருக்கு மதுபழக்கம் இருந்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் மனோகர் குடித்து விட்டு வந்ததை மனைவி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 16, 2025

புதுச்சேரி: குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

வில்லியனூர் குடிநீர் பிரிவு பொறையூர் மேல்நிலை தொட்டியில் (17.10.2025) பணிகள் நடக்கிறது. அதனால் நாளை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பொறையூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் கோபாலன்கடை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் (18.10.2025) நண்பகலில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News October 16, 2025

புதுச்சேரி: டிகிரி போதும்..ரயில்வேயில் வேலை

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-5, OBC-3)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE . இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!