News October 16, 2025

சிவகாசியில் பட்டாசு கடைகள் மூடல்

image

சிவகாசி பகுதியில் சுமார் 4000 பட்டாசு கடைகள் மூலமாக தீபாவளிக்கான பட்டாசு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்டாசு விற்பனையில் முறையாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஏராளமான கடைகளில் வணிகவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வரி முறையாக செலுத்தாத பட்டாசு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனிடையே சோதனைக்கு பயந்து பெரும்பாலான பட்டாசு கடைகள் மூடப்பட்டது.

Similar News

News October 16, 2025

விருதுநகர்: மழை காலத்தில் கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

image

விருதுநகர் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.

News October 16, 2025

சதுரகிரிக்கு வருகிற அமாவாசை நாட்களில் செல்ல தடை

image

சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஐப்பசி மாதம் சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு மலையேறி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

விருதுநகர்: ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தோணுகாலில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளியை முன்னிட்டு நடந்த ஆட்டுச்சந்தையில் ரூபாய் 3 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது. 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆனதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். நல்ல விலை போனதால் வியாபாரிகளும், ஆட்டின் உரிமையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!