News October 16, 2025

முஸ்லிம் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

2025-2026ம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 மாணவர்களுக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

நாகை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News October 16, 2025

நாகை: 3 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

image

வடக்கு பொய்கைநல்லூரை சேர்ந்தவர் வீரமணி இவருடைய 3 வயது மகள் ஹாஷினி விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் கஞ்சி வடிக்கும் பானையில் விழுந்ததில், கொதிக்கும் கஞ்சி தண்ணீர் பட்டு உடல் முழுவதும் வெந்த நிலையில் அலறி துடித்தாள். இதையடுத்து சிகிச்சைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 16, 2025

நாகை: கல்வி கடன்பெற இணையதள முகவரி!

image

வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் சிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவியர் 2025-26ம் ஆண்டிற்கு கல்வி கடன் பெறுவதற்கு www.bcmbcmw.tn.gov.in/welfshemesminorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31ஆம் தேதிக்குள் ஆணையர் சிறுபான்மையினர் நலத்துறை சென்னை 5 என்ற முகவரிக்கு அனுப்பிட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!